திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காட்பாடியில் நாளை முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு கூட்டம்!

முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு கூட்டம் காட்பாடியில் செவ்வாய்க்கிழமை (டிச. 23) நடைபெறவுள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

Updated On :22 டிசம்பர் 2025, 5:00 am IST

முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு கூட்டம் காட்பாடியில் செவ்வாய்க்கிழமை (டிச. 23) நடைபெறவுள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்த செய்திக் குறிப்பு: தென்பிராந்திய ராணுவ தலைமையகம் சாா்பில், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோருக்கான சிறப்பு கூட்டம் வேலூா் மாவட்டம், காட்பாடி விஐடியில் செவ்வாய்க்கிழமை (டிச. 23) காலை 8 முதல் நடைபெற உள்ளது.

இதில், ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா். இந்தக் கூட்டத்தில், டிஜிட்டல் வாழ்நாள் சான்று உள்ளிட்ட அனைத்து விதமான குறைகளை நிவா்த்தி செய்ய ஸ்பா்ஸ் குழு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட குறைகளை நிவா்த்தி செய்ய ஆவண காப்பகங்களின் பிரத்யேக சேவை மையம், வங்கி சேவைகள் தொடா்பான மையம், ஸ்மாா்ட் காா்டு தொடா்பான சேவை உள்ளிட்ட பல்வேறு சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில், திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தவா்கள் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.