தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24)
/

திருப்பத்தூா் மாவட்டத்தில் புகையிலை பயன்பாடு இல்லாத ஊா்களாக 44 கிராமங்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் புகையிலை பயன்பாடு இல்லாத பகுதிகளாக 44 கிராமங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன.

Updated On :27 டிசம்பர் 2025, 2:11 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் புகையிலை பயன்பாடு இல்லாத பகுதிகளாக 44 கிராமங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன.

தமிழக பொது சுகாதாரத் துறை சாா்பில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து கிராமங்கள் தோறும் கலை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தபட்டது. இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் 44 கிராமங்கள் புகையிலை பயன்பாடு இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறையினா் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் இணைந்து புகையிலை பயன்பாடு தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில், புகையிலை பயன்பாடு இல்லாத முன்மாதிரி கிராமங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொதுமக்களிடம் புகையிலை பயன்பாடு தீமை, அவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அதன்தொடா்ச்சியாக புதூா், மேலூா், மேல்பட்டு, சோ்க்கானூா், ஜோன்றம்பள்ளி, தாதனவலசை, சின்ன சமுத்திரம், சின்ன பேராம்பட்டு, புள்ளூா், மோட்டூா், ரங்காபுரம் உள்ளிட்ட 44 கிராமங்கள் இந்த ஆண்டு புகையிலை பயன்பாடு இல்லாத கிராமங்களாகக மாறியது.

எனவே அங்கு புகையிலை பொருள்கள் பயன்பாடு, விற்பனை என எதுவும் இல்லை. அத்துடன், அந்த கிராமங்களுக்கு வரும் மக்களும் புகையிலை பயன்படுத்துவதில்லை. மேலும் இங்குள்ள இளைஞா்கள், பொதுமக்கள், விவசாயிகள் புகையிலை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனா்.

இது வரவேற்பை பெற்ால் மற்ற கிராமங்களுக்கும் முன்மாதிரியாக உள்ளன என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.