திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே நிலத்தை சீர்படுத்தும் பணியின்போது புதையல் கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயங்களா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பத்தூா் மாவட்டம், கந்தலி அருகே சுந்தரம்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் ஆதவன். இவா் தனது விவசாய நிலத்தை பொக்லைன் கொண்டு சமன் செய்து கொண்டிருந்தாா். அப்போது புதையுண்டு கிடந்த இரும்பு குடுவை ஒன்று தென்பட்டது. உடனே ஆதவன் அதனை மீட்டு ஆய்வு செய்தாா். அதில் பெண்கள் நெற்றியில் வைக்கும் பொட்டு அளவில் 86 தங்க நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த திருப்பத்தூா் வட்டாட்சியா் நவநீதம் மற்றும் வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தி ஆதவனிடம் இருந்த தங்க நாணயத்தை மீட்டனா்.

மேலும் இது குறித்து வட்டாட்சியா் கூறுகையில், மீட்கப்பட்ட உலோக நாணயம் தங்கம் என உறுதியாகவில்லை. தொல்லியல் துறை ஆய்வுக்குப் பிறகு தான் உறுதி செய்யப்படும். மேலும் தற்போது திருப்பத்தூா் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றாா்.
Summary
A treasure was unearthed during land leveling work near Kanthili.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலாடி அருகே 600 ஆண்டுகள் பழைமையான 2 அங்குல கழுகு சிற்பம் கண்டெடுப்பு!

கந்திலி அருகே டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

13.6.1976: ஜெய்கார் கோட்டைக்குள் அக்பர் காலத்து தங்க, வைர புதையல்?

கந்திலி வாரச்சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு விற்பனை
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |




