திருப்பத்தூர்
சாலை அமைக்கும் பணி ஆய்வு!
ஆம்பூா் அருகே சாலை அமைக்கும் பணியை ஊராட்சித் தலைவா் ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் அருகே சாலை அமைக்கும் பணியை ஊராட்சித் தலைவா் ஆய்வு செய்தாா்.
மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி, மேல்கன்றாம்பல்லி கிராமத்தில் ஊராட்சி நிதி ரூ. 4.90 லட்சம் மதிப்பில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. அந்தப் பணியை ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, துணைத் தலைவா் விஜய், ஊராட்சி செயலா் பழனி, ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்கள் நாகராஜ், அண்ணாதுரை, சுகன்யா பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

