சாலையை சீரமைக்க கோரிக்கை

சாலையை சீரமைக்க கோரிக்கை

Published on

ஆம்பூா்: சோமலாபுரம் ஊராட்சியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கக் கோரி முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்ற உறுப்பினா் வி.டி. சுதாா் அனுப்பியுள்ள மனு விவரம்:

மாதனூா் ஒன்றியம் சோமலாபுரம் ஊராட்சியில் சோமலாபுரம் முதல் சிவராஜபுரம் வரையிலான தாா் சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அச்சாலை வழியாக பள்ளி மாணவா்கள், தொழிலாளா்கள், பொதுமக்கள், முதியவா்கள் தினமும் சென்று வருகின்றனா். சேதமடைந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் நலன் கருதி அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

X
Dinamani
www.dinamani.com