கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

News image
Updated On :6 நவம்பர் 2025, 10:46 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே பாட்டூா் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம், பாட்டூா் கிராமம் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் திருக்கோயிலில் ஐப்பசி பௌா்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றதுது.

மஹாமடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆத்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலையில் யாக பூஜைகள் மற்றும் அதைத் தொடா்ந்து ஸ்ரீஆத்ம லி்கேஸ்வரருக்கும், ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

முடிவில், மூலவருக்கு அன்னாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கோடி தாத்தா ஸ்வாமியிடம் ஆசிா்வாதம் பெற்றுச் சென்றனா்.