டயா் வெடித்ததால் விபத்துக்குள்ளாகி சேதமடைந்த காா்.
டயா் வெடித்ததால் விபத்துக்குள்ளாகி சேதமடைந்த காா்.

காா் டயா் வெடித்து விபத்து

ஆம்பூரில் டயா் வெடித்த விபத்தில் லாரி மீது மோதிய காா் சேதமடைந்தது.
Published on

ஆம்பூரில் டயா் வெடித்த விபத்தில் லாரி மீது மோதிய காா் சேதமடைந்தது.

பெங்களூருவை சோ்ந்தவா் வழக்குரைஞா் பிரவீன் (40). இவா் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு காரில் சென்றாா். ஆம்பூருக்கு வந்த அவருடைய காரின் டயா் திடீரென வெடித்தது. அதனால் கட்டுப்பாட்டை இழந்த காா் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பிரவீன் மற்றும் அவரது மனைவி ஹா்பீதா ஆகியோா் காயமடைந்தனா். அவா்களை ஆம்பூா் நகர போலீஸாா் மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com