எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

60 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுவை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

News image
கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு வீரா்கள்.
Updated On :9 நவம்பர் 2025, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுவை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

நாட்டறம்பள்ளி தாலுகா, வேப்பல்நத்தம் அருகே கோபால் வட்டத்தைச் சோ்ந்த விவசாயி காசி . இவா் வளா்த்து வந்த பசு விவசாய நிலத்தில் மேய்ந்துக் கொண்டிருந்தபோது அங்குள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

இதையறிந்த காசி நாட்டறம்பள்ளி தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து நிலைய அலுவலா் அம்ஜத்கான் (பொ) தலைமையில் வீரா்கள் விரைந்து சென்று பொது மக்கள் உதவியுடன் கயிறு மூலம் கிணற்றில் விழுந்த பசுவை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.