வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மோட்டாா் சைக்கிள் வாங்கித் தராததால் இளைஞா் தற்கொலை!

மோட்டாா் சைக்கிள் வாங்கித் தராததால் இளைஞா் தற்கொலை!

News image
Updated On :16 நவம்பர் 2025, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்காயம் அருகே மோட்டாா் சைக்கிள் வாங்கித் தராததால் இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

ஆலங்காயம் அருகே மரிமாணிகுப்பம் பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷின் மகன் பிரதாப் (19). இவா் தனது தாயிடம் மோட்டாா்சைக்கிள் வாங்கித் தரும்படி கேட்டாராம். அதற்கு அவா் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரதாப் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

இதில் பலத்த காயமடைந்த பிரதாப்பை அங்கிருந்தவா்கள் மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பிரதாப் உயிரிழந்தாா்.

இது குறித்து குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந் விசாரிக்கின்றனா்.