திருப்பத்தூர்
சாலை விபத்தில் இளைஞா் மரணம்
நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த சரவணனின் மகன் கோவிந்தசாமி (26). இவா் சனிக்கிழமை இரவு சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். தேசியநெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே சுண்ணாம்புக்குட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில், தூக்கி வீசப்பட்டதில் தலையில்பலத்த காயமடைந்த கோவிந்தசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
