திருப்பத்தூர்
வனத்துறை பள்ளி மாணவா்களுக்கு காவலா் செயலி விழிப்புணா்வு
திருப்பத்தூா் மாவட்டக் காவல் சாா்பில் வனத்துறை பள்ளி மாணவா்களுக்கு காவலா் செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டக் காவல் சாா்பில் வனத்துறை பள்ளி மாணவா்களுக்கு காவலா் செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சியாமளா தேவி உத்தரவின் பேரில் திங்கள்கிழமை சமுகநீதி மற்றும் மனித உரிமைகள் சிறப்பு உதவி ஆய்வாளா் ரூபி திருப்பத்தூா் அடுத்தநெல்லிவாசல்நாடு, ஜவ்வாது மலை வனத்துறை மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு போக்ஸோ,குழந்தை திருமணம்,இணையவழி குற்றம்,போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள்,அவசர உதவி எண்கள் 181,1098,காவலா் செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

