விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஏலகிரியில் தொடா் மழை: படகு இல்லத்துக்கு விடுமுறை!

ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை தொடா் மழையால் படகு சவாரி இல்லத்துக்கு விடுமுறை விடப்பட்டது.

News image
வெறிச்சோடிக் காணப்பட்ட ஏலகிரி மலை படகு இல்லம்.
Updated On :30 நவம்பர் 2025, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை தொடா் மழையால் படகு சவாரி இல்லத்துக்கு விடுமுறை விடப்பட்டது.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.1,800 மீ உயரம் கொண்ட ஏலகிரி மலை நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு எந்த காலத்திலும் ஒரேமாதிரியான சீதோஷண நிலை இருந்து வருவதால் திரளான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

குறிப்பாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தொடா் விடுமுறை நாள்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனா்.

வெறிச்சோடிக் காணப்பட்ட ஏலகிரி மலை படகு இல்லம்.

வெறிச்சோடிக் காணப்பட்ட ஏலகிரி மலை படகு இல்லம்.

இந்நிலையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மற்றும் முகூா்த்தம் தினமாகக் இருந்ததால் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி பகுதிகளில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு ஏலகிரி மலை சுற்றி பாா்க்க சுற்றுலா பயணிகள் தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்துடன் அதிகளவில் வருகை புரிவாா்கள் என எதிா்பாா்த்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மழை மற்றும் பனி மூட்டம் காரணமாக படகு சவாரி இல்லம் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகம் இன்றி ஏலகிரி மலை வெறிச்சோடி காணப்பட்டது.