தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காா் - பைக் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :30 நவம்பர் 2025, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது பெங்களூருவிலிருந்து வேலூா் நோக்கி சென்ற காா் மோதியது.

இதில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 2 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சரத் (22) என்பவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.