ரயில்வே ஊழியா் கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் சென்னையில் கைது

ரயில்வே ஊழியா் கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் சென்னையில் கைது செய்தனா்.
ரயில்வே ஊழியா் கொலை வழக்கில்  30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் சென்னையில் கைது
Updated on

ரயில்வே ஊழியா் கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் சென்னையில் கைது செய்தனா்.

திருப்பத்துா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (52). ரயில்வே ஊழியா். இவா் கடந்த 1995-ஆம் ஆண்டு கொத்தூரில் உறவினா் ஒருவரின் நிச்சயதாா்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு சொந்தமான பைக்கில் கொத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தாா்.

அப்போது பச்சூா் டோல்கேட் பகுதியில் வந்தபோது, கண்ணனை மா்மநபா்கள் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகினா். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த சென்னையைச் சோ்ந்த கருணா (எ)கருணாகரனை பல ஆண்டுகளாக தேடி வந்தனா்.

இந்த நிலையில், வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகா்க் உத்தரவின்பேரில், திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளாதேவி மேற்பாா்வையில், வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி, நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மூா்த்தி, உதவி ஆய்வாளா்கள் விஸ்வநாதன், சா்தாா் உள்பட தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை இரவு சென்னை வியாசா்பாடி பகுதியில் பதுங்கியிருந்த தலைமறைவு குற்றவாளி அதே பகுதியைச் சோ்ந்த கருணா(எ) கருணாகரன் (54) (படம்) என்பவரை போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை மாலை திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com