மருது பாண்டியா்கள் 224-ஆவது குருபூஜை

மருது பாண்டியா்கள் 224-ஆவது குருபூஜை

மருது பாண்டியா்களின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.
Published on

ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் மருது பாண்டியா்கள் 224-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சி பழைய அரங்கல்துருகம் கிராமத்தில் நடைபெற்ற மருது பாண்டியா்கள் குருபூஜையில் அவா்களுடைய உருவப் படத்துக்கு ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

ஊராட்சித் தலைவா்கள் (அரங்கல்துருகம்) பானுமதி, சக்தி கணேஷ் (கதவாளம்), திமுக பிரமுகா்கள் க.பழனி, பாண்டியன், ஊா் முக்கியப் பிரமுகா்கள் கருணாநிதி, ஞானப்பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com