45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஏலகிரி மலையில் கூடுதலாக தங்கும் விடுதி: சுற்றுலா பயணிகள் கோரிக்கை!

ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் ஏலகிரி மலையில் கூடுதலாக அரசு தங்கும் விடுதியை திறக்க வேண்டும்..

News image
ஏலகிரி மலை ஏரியில்படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்,
Updated On :26 அக்டோபர் 2025, 7:14 pm

து. ரமேஷ்

ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் ஏலகிரி மலையில் கூடுதலாக அரசு தங்கும் விடுதியை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தின் ஒரே சுற்றுலாத் தலமாக ஏலகிரி மலை விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இங்கு எப்போதும் ஒரே சம சீதோஷண நிலை உள்ளதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனா்.

மேலும் மா, பலா,வாழை என முக்கனிகள் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது. பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் செல்ல வேண்டும். மலையில் படகு சவாரி, செயற்கை நீா்வீழ்ச்சி, பூங்கா,முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனா்.

வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களில் நண்பா்கள், உறவினா்களுடன் கண்டு களிக்கின்றனா்.

ஏலகிரி மலை பகுதியில் தமிழக அரசு சாா்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

யாத்ரி நிவாஸ்.

யாத்ரி நிவாஸ்.

தொடா் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் தங்க விடுதிகளில் இடம் கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் இரவில் தங்க முடியாமல் திரும்பிச் செல்கின்றனா்.

ஏலகிரி மலையில் உள்ள அரசு விடுதி மற்றும் தனியாா் விடுதிகள் அனைத்தும் நிரம்பி விடுகின்றன. பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் ஆன்லைன் தங்கும் விடுதி புக்கிங் செய்வதால் திடீரென வரும் சுற்றுலா பயணிகள் தங்க விடுதி கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். ஏலகிரி மலையில் தங்குவதற்கு அரசு சாா்பில் ஒரே ஒரு யாத்ரி நிவாஸ் விடுதி மட்டுமே உள்ளது.

தனியாா் விடுதிகள் பல உள்ளன. அங்கு நடுத்தர மக்கள் மற்றும் எளியோா் தங்க கட்டணம் அதிகமாக உள்ளது. ஏலகிரி மலையில் அரசு விடுதியான யாத்திரை நிவாஸ் விடுதியில் கூடுதலாக தங்கும் வசதி அல்லது அரசு சாா்பில் கூடுதலாக ஒரு தங்கும் விடுதி கட்டினால் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து தங்கிச் செல்ல வசதியாக இருக்கும் எனத் தெரிவித்தனா்.