திருப்பத்தூர்
ரூ. 9.50 லட்சத்தில் சாலை பணிக்கு பூமி பூஜை
செங்கிலிகுப்பம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், ரூ. 9.50 லட்சம் மதிப்பீட்டில் மாதனூா் ஒன்றியம், செங்கிலிகுப்பம் கிராமத்தில் சாலை அமைக்க ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பூமி பூஜையிட்டு பணியைத் தொடங்கி வைத்தாா்.
மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி.ராமமூா்த்தி, கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் வினோத்குமாா், மாவட்டப் பிரதிநிதி தெய்வநாயகம், ஊராட்சித் தலைவா் ஜெயலட்சுமி ஆனந்தராஜ், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா.சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

