ரூ.9.90 லட்சத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு

ரூ.9.90 லட்சத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு

Published on

ஆம்பூரில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் விழாவுக்கு தலைமை வகித்து ரூ.9.90 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்து வைத்தாா்.

நகராட்சி ஆணையா் எம். முத்துசாமி முன்னிலை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் ஹா்ஷவா்த்தன் வரவேற்றாா். நகராட்சி இளநிலை பொறியாளா் சண்முகம், இளநிலை உதவியாளா் மோகன்ராஜ் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com