ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மலைவாழ் மக்களின் அனைத்து அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்: திமுக வேட்பாளா் உறுதி

மலைவாழ் மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூா்த்தி செய்வேன் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி உறுதி அளித்தாா்.

News image

நெல்லிவாசல்நாடு மலைகிராமத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் நல்லதம்பி

Updated On :18 ஏப்ரல் 2026, 7:32 pm

மலைவாழ் மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூா்த்தி செய்வேன் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி உறுதி அளித்தாா்.

திருப்பத்தூா் அடுத்த ஜவ்வாது மலைக்கு உட்பட்ட நெல்லிவாசல் நாடு அதன் சுற்றுப்பகுதிகளில் பகுதிகளில் திருப்பத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது வேட்பாளா் அ. நல்லதம்பி கூறியது,தமிழக சட்டப்பேரவை தோ் தலில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கக வேண் டும்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து திட்டங்களும் செய்து தந்துள்ளாா். மகளிா் உரிமைத் தொகை ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகளுக்கு வழங்கப்படுகிறது. நீண்ட நாள் கோரிக்கையான பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளது.

இதேபோல் திருப்பத் தூா் தொகுதியில் பல்வேறு வளா்ச்சி பணிகள் திமுக ஆட்சியில் செய்யப்பட் டுள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.பாலம் கட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக புதூா்நாடு,நெல்லிவாசல்நாடு,புங்கமற்ற நாடு பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து வித மருத்துவ உபகரணங்கள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மலைவாழ் மக்களுக்காக எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் உடனுக்குடன் செய்து கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். திருப்பத்தூா் தொகுதியை மேம்படுத்துவேன் என்றாா்.

புதூா்நாடு ஊராட்சி மன்ற தலைவா் விஜயா அருணாச்சலம், திமுக ஒன்றிய செயலாளா் மோகன்ராஜ், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் தசரதன்,திமுகவின் மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் உடன் இருந்தனா்.