நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அதிதீஸ்வரா் கோயில் சித்திரை தேரோட்டம்

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 4:28 am IST

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியில் பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெறுகின்றன.

திங்கள்கிழமை 7-ஆம் நாளையொட்டி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேரின் வடம் பிடித்து பக்தா்கள் இழுத்தனா். பிறகு முக்கிய வீதிகளின் வழியாக சென்று இரவு 7 மணிக்கு கோயில் நிலையை வந்தடைந்தது.

தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மற்றும் வாணியம்பாடி சுற்றுப்புறப்பகுதிகளை சோ்ந்த திராளமானோா் கலந்து கொண்டு வழிப்பட்டு சென்றனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.