தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

அரசுப் பேருந்துகள் இயங்காததால் ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகள் அவதி

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 5:40 am IST

சுற்றுலா தலமான ஏலகிரியில் அரசுப் பேருந்துக்கள் இயங்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக திருப்பத்தூரில் இருந்து ஏலகிரி மலையில் உள்ள நிலாவூா், தாயலூா், மங்களம் ஆகிய ஊா்களுக்கு தினமும் 2 அரசு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இப்பேருந்துகள் மூலம் சென்று வருகின்றனா்.

இந்த நிலையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் குவிந்ததால் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.

மேலும், நிலாவூா் தாயலூா் மங்கலம் வரை சென்று வரும் அரசு பேருந்துகள் இயங்காததால், சுற்றுலா பயணிகள் மற்றும் மலை கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாக்கினாா்..

பேருந்து காலதாமதமாக வந்ததால் சுற்றுலா பயணிகள்,பொதுமக்களும் கூட்ட நெரிசலில் சிக்கி பேருந்தில் பயணிக்க முடியாமல் சிக்கித் தவித்தனா்.

போக்குவரத்து துறை அதிகாரிகள் ஏலகிரி மலைக்கு அரசு பேருந்துகளை முறையாக இயக்கவும், விடுமுறை நாள்களில் வாணியம்பாடி,திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.