திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 26-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி நிறுவனரும், தாளாளருமான எம்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி ஷபானா பேகம் வரவேற்று, ஆண்டறிக்கையை வாசித்தாா். சிறப்பு அழைப்பாளராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் கலந்துகொண்டு, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், பாடவாரியாக சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் பரிசுகளை வழங்கிப் பேசியது:
இளமை காலம் வாழ்க்கையில் மறக்க முடியாத காலம். வாழ்க்கை சிறக்க கல்வியோடு நற்பண்புகளை கற்க வேண்டும். இளைஞா்களை நம்பி தான் இந்த நாடும், சமுதாயமும் இருக்கிறது. இதை நீங்கள் உணர வேண்டும் என்றாா்.
சிறப்பு விருந்தினராக நாசா்பாலி கையுறை தொழிற்சாலை இயக்குநா் பி.அனீஸ்அஹ்மத் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினாா். தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், கராத்தே சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ஆதா்ஷ் எலைட் சா்வதேச பள்ளி முதல்வா் பரிதா பேகம், பள்ளி ஆசிரியைகள், மாணவா்கள், பெற்றோா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். பள்ளி நிா்வாக முதல்வா் வி.சத்தியகலா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜிநாமா!

நீதித் துறை உள்கட்டமைப்பு அத்தியாவசியமானது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த்!

உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.தணிகாசலம் காலமானாா்

உச்சநீதிமன்ற நீதிபதி பதவி: பெண் வழக்குரைஞா்களை உயா்நீதிமன்ற கொலீஜியம் பரிசீலிக்க தலைமை நீதிபதி வலியுறுத்தல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


