புத்துமாரியம்மன் கோயிலில் ரூ.23.50 லட்சம் உண்டியல் காணிக்கை

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சியில் புத்துமாரியம்மன் அமைந்துள்ளது.
Published on

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சியில் புத்துமாரியம்மன் அமைந்துள்ளது.

உதவி ஆணைா், கோயில் செயல் அலுவலா், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா், ஊா் பொதுமக்கள், பணியாளா்கள் முன்னிலையில் கோயில் உண்டியல் திறப்பு நடைபெற்றது.

இதில் தற்காலிக உண்டியல் மூலம் ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்து 326 ரூபாயும், மற்றும் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.19 லட்சத்து 60 ஆயிரத்து 696 ரூபாயும், 40.750 கிராம் தங்கம் மற்றும் 96.000 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

Dinamani
www.dinamani.com