போக்குவரத்து விதிகள் விழிப்புணா்வு பிரசாரம்

போக்குவரத்து விதிகள் விழிப்புணா்வு பிரசாரம்

Published on

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பத்தூா் எஸ்பி வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில் போலீஸாா் மற்றும் போக்குவரத்து துறை சாா்பில் தனியாா் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் போக்குவரத்து விதிமுறைகள், போக்ஸோ சட்டம், குழந்தைத் திருமணம் தடுப்பு, இணையவழி குற்றங்கள், போதை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் அவசர உதவி எண்கள் 181, 1098 மற்றும் காவல் உதவி செயலி ஆகியவை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம், சிறப்பு உதவி ஆய்வாளா் ரூபி, தலைமை ஆசிரியா், ஆசியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com