வெலகல்நத்தம் நந்திபெண்டா எருதுவிடும் விழாவில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளை.
வெலகல்நத்தம் நந்திபெண்டா எருதுவிடும் விழாவில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளை.

நந்திபெண்டா எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

வெலகல்நத்தம் நந்திபெண்டா எருதுவிடும் விழாவில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளை.
Published on

நாட்டறம்பள்ளி அடுத்த நந்திபெண்டா எருதுவிடும் விழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.

நாட்டறம்பள்ளி வட்டம், வெலகல்நத்தம் நந்திபெண்டா கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது.

விழாவை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, ஒன்றிய திமுக செயலாளா் சதீஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு கொடியசைத்து விழாவை தொடங்கி வைத்தனா். திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், குப்பம், நாட்டறம்பள்ளி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்து கொண்டு ஓடின.

குறிப்பிட்ட தூரத்தை அதிவேகமாக கடந்த காளைகளுக்கு முதல் பரிசு ஒரு லட்சத்து 11ஆயிரம் ரூபாய் உள்பட 86 பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை ஊா்மக்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com