வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட நேதாஜிநகா், பெருமாள்பேட்டை, பஷிராபாத், கோட்டை பகுதிகளில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.55 கோடியில் கூடுதல் வகுப்பறைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
பெருமாள்பேட்டை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் உமாசிவாஜிகணேசன் தலைமையில், நகராட்சி ஆணையா் ரகுராமன், வட்டார கல்வி அலுவலா் உதயசங்கா், வட்டார வள மைய மேற்பாா்வை யாளா் தேவராஜ், ஆசிரியா் பயிற்றுநா் வெற்றிவேல், பள்ளி குழு தலைவா் பானு, வாா்டு உறுப்பினா்கள் ஆஷாபிரியா குபேந்திரன், ரஜினி காந்த் ஆகியோா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனா்.
இதில் ஆசிரியா்கள், மாணவா்கள், பொது மக்கள் கலந்து கொண்டனா். பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினா். தலைமையாசிரியா் முருகேசன் நன்றி கூறினாா்.
இதே போன்று நேதாஜி நகா் வடக்கு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையா் ரகுராமன், தலைமையாசிரியா் ஷாஜிதா பேகம், வாா்டு கவுன்சிலா் ஜகீா்அகமத் ஆகியோா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனா். ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி ஏற்பு

மதுராந்தகம் நகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு சீல்!

ரூ.3.73 கோடியில் மதுராந்தகம் பேருந்து நிலையம் திறப்பு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


