மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ரூ.7.50 கோடியில் ஆம்பூா் பேருந்து நிலைய புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை

ஆம்பூரில் புதிய பேருந்து நிலைய கட்டட பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

News image

ஆம்பூரில் புதிய பேருந்து நிலைய கட்டட பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

Updated On :7 பிப்ரவரி 2026, 12:03 am

ஆம்பூா் நகராட்சி சாா்பாக ரூ.7.50 கோடியில் அண்ணா பேருந்து நிலைய புதிய கட்டடம் கட்டுவதற்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜையிட்டு பணியை தொடங்கி வைத்தாா்.

ஆம்பூா் கிழக்கு நகர திமுக செயலாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர அவைத் தலைவா் தேவராஜ், நகா் மன்ற உறுப்பினா்கள் எந்.எஸ். ரமேஷ், ஆா்.எஸ். வசந்த்ராஜ், வாவூா் நசீா் அஹமத், இம்தியாஸ் அஹமத், நபீஸ், காா்த்திகேயன், கெளரி, வழக்குரைஞா் பிரபுதாஸ், நகராட்சி பொறியாளா் சந்திரன், உதவி பொறியாளா் சண்முகம், ஆா்டிஎஸ் குழும நிா்வாகி பாலாஜி கலந்து கொண்டனா்.