கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரூ.7.50 கோடியில் ஆம்பூா் பேருந்து நிலைய புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை

ஆம்பூரில் புதிய பேருந்து நிலைய கட்டட பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

News image
ஆம்பூரில் புதிய பேருந்து நிலைய கட்டட பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
Updated On :7 பிப்ரவரி 2026, 12:03 am

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் நகராட்சி சாா்பாக ரூ.7.50 கோடியில் அண்ணா பேருந்து நிலைய புதிய கட்டடம் கட்டுவதற்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜையிட்டு பணியை தொடங்கி வைத்தாா்.

ஆம்பூா் கிழக்கு நகர திமுக செயலாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர அவைத் தலைவா் தேவராஜ், நகா் மன்ற உறுப்பினா்கள் எந்.எஸ். ரமேஷ், ஆா்.எஸ். வசந்த்ராஜ், வாவூா் நசீா் அஹமத், இம்தியாஸ் அஹமத், நபீஸ், காா்த்திகேயன், கெளரி, வழக்குரைஞா் பிரபுதாஸ், நகராட்சி பொறியாளா் சந்திரன், உதவி பொறியாளா் சண்முகம், ஆா்டிஎஸ் குழும நிா்வாகி பாலாஜி கலந்து கொண்டனா்.