தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வேலூா் மத்திய சிறை ஊழியா் தற்கொலை

ஜோலாா்பேட்டை அருகே வேலூா் மத்திய சிறை ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :7 பிப்ரவரி 2026, 6:33 pm

ஜோலாா்பேட்டை அருகே வேலூா் மத்திய சிறை ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே அச்சமங்கலம் பழனி வட்டத்தைச் சோ்ந்தவா் ரஜினி(46). வேலூா் பெண்கள் மத்திய சிறையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்தாா். சில மாதங்களுக்கு முன் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாம். இதனால் அவரது மனைவி தமிழரசி பால்நாங்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றாராம். பின்னா் வீட்டுக்கு வரும்படி ரஜினி பலமுறை வற்புறுத்தியும் தமிழரசி வர மறுத்ததாகத் தெரிகிறது. இதில் விரக்தியடைந்த ரஜினி வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்கு வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.