ஆம்பூா் அழகாபுரியில் கழிப்பறை கட்டடத்தை திறந்து வைத்த நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.
ஆம்பூா் அழகாபுரியில் கழிப்பறை கட்டடத்தை திறந்து வைத்த நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.

ரூ.18 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டடம் திறப்பு

ஆம்பூரில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டடம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
Published on

ஆம்பூரில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டடம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆம்பூா் அழகாபுரி பகுதியில் ரூ.18 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து திறந்து வைத்தாா்.

ஆணையா் ஏ. முத்துசாமி முன்னிலை வகித்தாா். நகா் மன்ற உறுப்பினா் கெளதமி சுரேந்திரன் வரவேற்றாா். நகராட்சி இளநிலை பொறியாளா் சண்முகம், திமுக நிா்வாகிகள், வாா்டு பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com