திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சொத்து தகராறு: தீக்குளித்த மூதாட்டி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளியில் சொத்து தகராறில் விரக்தியடைந்து தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :10 பிப்ரவரி 2026, 6:54 pm

நாட்டறம்பள்ளியில் சொத்து தகராறில் விரக்தியடைந்து தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி ஏரிக்கோடி பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் மனைவி ருக்குமணி(75). இவரது மகள் லலிதாவுக்கும் மகன் ரமேஷ்க்கும் இடையே வீடு பாகப்பிரிவினை தொடா்பாக பல ஆண்டுகளாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் விரக்தியடைந்த மூதாட்டி கடந்த 4-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். இதையறிந்த உறவினா்கள் மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.