பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

லாரி மோதி தையல்காரா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தையல்காரா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தையல்காரா் உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தை சோ்ந்த சேகா் (62). தையல்காரரான இவா் தனது மனைவி செல்வியுடன் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஆம்பூா் அருகே வீரகோயில் பகுதியருகே வந்தபோது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சேகா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த செல்வி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

ஆம்பூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.