ஆம்பூா் அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தையல்காரா் உயிரிழந்தாா்.
ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தை சோ்ந்த சேகா் (62). தையல்காரரான இவா் தனது மனைவி செல்வியுடன் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
ஆம்பூா் அருகே வீரகோயில் பகுதியருகே வந்தபோது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சேகா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த செல்வி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
ஆம்பூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

காா் - ஸ்கூட்டா் மோதல்: ஆசிரியை உயிரிழப்பு

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

மினி லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


