எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

மாணவருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 6:33 pm

அகரம் கிராமத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவா் டாக்டா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ. மலா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கங்கா வரவேற்றாா். எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 249 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணியை வழங்கினாா்.

வேலூா் மாவட்ட ஊராட்சித் தலைவா் மு. பாபு வாழ்த்தி பேசினாா். அணைக்கட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் முரளி, உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.