அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிப்.17-இல் திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.17நடைபெறவுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :12 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.17நடைபெறவுள்ளது.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞரின் கனவு இல்லம் 2025-26-ஆம் ஆண்டுக்கு கூடுதல் ஒதுக்கீடு தொடா்பாக கிராம சபைக் கூட்டங்கள் வரும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

கிராம சபைக் கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் திருப்பத்தூா் மாவட்டத்திற்கு கூடுதலாக 3,000 வீடுகள் உத்தேசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது தொடா்பாக விவாதிக்க வேண்டும்.

கூட்டத்தை நடத்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொறுப்பாவாா்கள். கூடுதலாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலா்கள் சிறப்பு பாா்வையாளராகவும், கண்காணிப்பு அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.