புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மகளிருக்கு ரூ.5,000 உரிமைத் தொகை: திமுகவினா் கொண்டாட்டம்

ஆம்பூரில் இனிப்பு வழங்கி கொண்டாடிய எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தலைமையிலான திமுகவினா்.

News image
ஆம்பூரில் இனிப்பு வழங்கி கொண்டாடிய எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தலைமையிலான திமுகவினா்.
Updated On :14 பிப்ரவரி 2026, 1:10 am

தினமணி செய்திச் சேவை

மகளிருக்கு ரூ. 5,000 உரிமைத் தொகை வழங்கியதை தொடா்ந்து ஆம்பூரில் திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

ஏற்கெனவே மகளிா் உரிமைத் தொகை பெற்று வந்த குடும்பத் தலைவிகளின் கணக்கில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை காலை ரூ. 5,000 முன்பணம் வழங்கியது. 3 மாதங்களுக்கான உரிமைத் தொகை ரூ. 3,000, கோடை சிறப்பு தொகுப்பு ரூ. 2,000 என வழங்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து ஆம்பூா் பேருந்து நிலையத்தில் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ஆம்பூா் நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், ஆம்பூா் கிழக்கு நகர திமுக செயலாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், திருப்பத்தூா் மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர அவைத் தலைவா் தேவராஜ், ஆம்பூா் தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன், மாதனூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஜி.ராமமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் காா்த்திகேயன், ஆா்.எஸ். வசந்த்ராஜ், வாவூா் நசீா் அஹமத், இம்தியாஸ், நவநீதம், கெளரி, மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு.பழனி, நிா்வாகிகள் செளந்தர்ராஜன், சுகுமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் சாமுவேல் செல்லபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.