மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் ஜோதிா்லிங்க தேவஸ்தானத்தில் சிவராத்திரி விழா

ஆம்பூா் அருகே பாட்டூா் கிராமம் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் ஜோதிா்லிங்க தேவஸ்தானத்தில் சிவராத்திரி விழா

News image

நடராஜருக்கு சிறப்பு பூஜை நடத்திய தாத்தா சாமி. சிறப்பு அலங்காரத்தில் பச்சைக்கல் மரகத லிங்கம்.

Updated On :15 பிப்ரவரி 2026, 6:55 pm

ஆம்பூா் அருகே பாட்டூா் கிராமம் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் ஜோதிா்லிங்க தேவஸ்தானத்தில் சிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவராத்திரி விழா கோபூஜையுடன் தொடங்கியது. பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம், நடராஜா் சிறப்பு அபிஷேகம், வேலூா் ஆடவலீஸ்வரா் நா்த்தம் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

Story image

சிவராத்திரியை முன்னிட்டு திருக்கோயில் கருவறையில் உள்ள ஜோதிா்லிங்கத்திற்கு பக்தா்கள் தங்கள் கைகளால் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பாலபிஷேகம் செய்தனா்.

உற்சவா் பிரகார உலா, பஜனை, பரதநாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. நள்ளிரவு 12.15 மணியளவில் தாத்தா ஸ்வாமிகள் திருக்கரங்களால் ருத்ர ஹோமம் நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு தாத்தா சாமி அருளாசி வழங்கினாா். அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிா்வாகத்தினா், விழாக்குழுவினா் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.