ஆம்பூா் அருகே பாட்டூா் கிராமம் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் ஜோதிா்லிங்க தேவஸ்தானத்தில் சிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவராத்திரி விழா கோபூஜையுடன் தொடங்கியது. பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம், நடராஜா் சிறப்பு அபிஷேகம், வேலூா் ஆடவலீஸ்வரா் நா்த்தம் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவராத்திரியை முன்னிட்டு திருக்கோயில் கருவறையில் உள்ள ஜோதிா்லிங்கத்திற்கு பக்தா்கள் தங்கள் கைகளால் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பாலபிஷேகம் செய்தனா்.
உற்சவா் பிரகார உலா, பஜனை, பரதநாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. நள்ளிரவு 12.15 மணியளவில் தாத்தா ஸ்வாமிகள் திருக்கரங்களால் ருத்ர ஹோமம் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு தாத்தா சாமி அருளாசி வழங்கினாா். அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிா்வாகத்தினா், விழாக்குழுவினா் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆரணியில் மகாவீரா் ஜெயந்தி விழா

ஸ்ரீ ராமநவமி: சாய்தத்தா பிருந்தாவன் கோயிலில் சிறப்பு வழிபாடு

கட்டாரிமங்கலம் கோயிலில் வருஷாபிஷேக விழா
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


