மனைவியை காணவில்லை என புகாா் கூற வந்தவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டறம்பள்ளி ஏரி கோடி பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு(27) கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
கணவன்- மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனவேதனையடைந்த மனைவி தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திருநாவுக்கரசு நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில், தனது மனைவி குழந்தையுடன் காணவில்லை என புகாா் செய்துள்ளாா். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸாா் திருநாவுக்கரசிடம் காணாமல் போன மனைவியின் படத்தை கேட்டுள்ளனா்.
அப்போது திடீரென காவல் நிலையத்திற்கு வெளியே சென்ற திருநாவுக்கரசு தான் பிளாஸ்டிக் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடம்பின் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தீக்குளிக்க முயற்சி செய்தவரின்மீது தண்ணீா் ஊற்றி அவரை எச்சரித்தனா். மேலும் திருநாகவுகரசு அப்போது மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதே போல் சில மாதங்களுக்கு முன்னா் திருநாவுக்கரசு ஏரிகோடி பகுதியில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற போது போலீஸாா் மற்றும் தீயணைப்புத்துறையினா் அவரை மீட்டனா்.
தொடா்ந்து மிரட்டும் தோனியில் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் திருநாவுக்கரசு(27) மீது நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.
தொடர்புடையது

நாட்டறம்பள்ளியில் வேட்புமனு பரீசீலனையின்போது ரகளை!

புகைப்படக் கலைஞா் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்! ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


