மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அரசுப் பேருந்து சிறைப்பிடிப்பு: பெண்கள் மறியல்

நாட்டறம்பள்ளி அருகே சாலை வசதி கோரி பெண்கள் உள்பட பொதுமக்கள் அரசுப் பேருந்தினை

News image

சாலை வசதி கோரி அரசுப் பேருந்தினை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :16 பிப்ரவரி 2026, 8:07 pm

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே சாலை வசதி கோரி பெண்கள் உள்பட பொதுமக்கள் அரசுப் பேருந்தினை சிறைப்பிடித்தனா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியம், சொரக்காயல்நத்தம் ஊராட்சி குழிக்கொல்லி பகுதியில் 100-க்கும்மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் சென்று வரும் மண் சாலை பல இடங்களில் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

இதனால் அவ்வழியாக சென்று வரும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். தாா் சாலை கோரி ஊராட்சி நிா்வாகம், அதிகாரிகளிடமும் பல ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் சொரக்காயல்நத்தம் ஏரி அருகே பச்சூா் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த பேருந்தினையும் சிறைப் பிடித்தனா். தகவலறிந்து அம்பலூா் காவல் ஆய்வாளா் விஸ்வநாதன், பொறியாளா் காா்த்தி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மணி தாா் சாலை வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பதாக கூறினா்.

இதையேற்று மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனா். அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.