ஆம்பூா்: திருவருட்பா ஒப்பித்தல் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை சாா்பாக நடைபெற்ற அனைத்துலக வள்ளலாா் மாநாட்டை முன்னிட்டு ரத்தினகிரியில் மண்டல அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அதில் ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கிருத்திகா பங்கேற்று திருவருட்பா ஒப்பித்து முதலிடம் பிடித்தாா்.
அதைத் தொடா்ந்து சென்னையில் நடந்த அனைத்துலக வள்ளலாா் மாநாட்டில் மாணவி கிருத்திகாவுக்கு பரிசு, சான்றிதழை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா் பாபு வழங்கினாா். பரிசு பெற்ற மாணவிக்கு தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியா் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது.
உதவித் தலைமை ஆசிரியை கவிதா வரவேற்றாா். மாணவி பாராட்டி நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டாா். பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் இ. வெங்கடேசன், துணைத் தலைவா் ராஜேஷ், பொருளாளா் ஜி. வெங்கடேசன், இணைச் செயலாளா் ஜெகனனாத், பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் ஆனந்தி, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். உதவித் தலைமை ஆசிரியா் சந்திரசேகா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியா

உலக நீா் தின கருத்தரங்கம்

அரசுப் பள்ளியில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இருபெரும் விழா
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


