மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.

Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூரில் உள்ள மஞ்சள் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்த மாதாந்திர ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான க.சிவசௌந்திரவல்லி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். அப்போது தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் உடன் இருந்தனா்.