கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.
Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூரில் உள்ள மஞ்சள் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்த மாதாந்திர ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான க.சிவசௌந்திரவல்லி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். அப்போது தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் உடன் இருந்தனா்.