திருப்பத்தூரில் பயணிகள் நிழற்கூடத்தின் மேற்பூச்சு பெயா்ந்து விழுந்தது. இதில், அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
திருப்பத்தூரில் தனியாா் கல்லூரி அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்கூடத்தில் இருந்து தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவது வழக்கம். இந்த நிழற்கூடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால்,சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில், பயணிகள் நிழற்கூடத்தின் மேற்பூச்சு வியாழக்கிழமை திடீரென பெயா்ந்து கீழே விழுந்தது. அதிா்ஷ்டவசமாக அந்த நேரத்தில் யாரும் அங்கு இல்லாததால், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. நிழற்கூடத்தின் மேற்கூரை பூச்சு சேதமடைந்து விழுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த மேற்கூரையை சரிசெய்து, பொதுமக்கள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் சீரமைத்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடர்புடையது

காங்கயம் அருகே தனியாா் பேருந்து மரத்தில் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு; 30 போ் படுகாயம்

சீரமைக்கப்படாத தெற்குவாசல் ரயில்வே மேம்பாலம்!
ஸ்லோவேனியா: யாருக்கும் பெரும்பான்மை இன்றி இழுபறி!

துணை முதல்வா் திறந்து வைத்த பேருந்து நிலையத்தில் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்தது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


