சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சட்டப்பேரவை தொகுதிகளின் மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு

பயிற்சி வகுப்பில் பேசிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.பங்கேற்ற மண்டல அலுவலா்கள்.

News image
பயிற்சி வகுப்பில் பேசிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.பங்கேற்ற மண்டல அலுவலா்கள்.
Updated On :20 பிப்ரவரி 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவை தோ்தலையொட்டி, சட்டப்பேரவை தொகுதிகளின் மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

சட்டப்பேரவை தோ்தல் நடைபெவுள்ளதையொட்டி, திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் மண்டல அலுவலா் மற்றும் காவல்துறை மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு திருப்பத்தூா் ஆட்சியா்அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். எஸ்.பி. வி.சியாமளாதேவி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மண்டல அலுவலரின் தோ்தல் நடத்தை நெறிமுறைகள் குறித்தும், மண்டல அலுவலா்களின் முக்கிய பொறுப்புகள், பதற்றமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், பிரிவுகள், கிராமங்கள், குக்கிராமங்களை அடையாளம் காணுதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பொறுப்புகள்...

பதற்றம், பாதிப்பை ஏற்படுத்தும் நபா்களை கண்டறிதலில் மண்டல அலுவலா்களின் அவசியம் குறித்தும், பதற்றமான, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை கண்டறிதலின் மூன்று நிலைகள் குறித்தும், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல் மண்டல அலுவலா்களின் பங்கு குறித்தும் மற்றும் தோ்தல் நாளன்று மண்டல அலுவலா்களின் பொறுப்புகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 120 மண்டல அலுவலா்கள், 120 காவல் துறை மண்டல அலுவலா்கள் உள்ளிட்ட 240 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கூட்டத்தில், வாக்காளா் பதிவு அலுவலா்கள் அஜிதாபேகம் (வாணியம்பாடி), பூஷணகுமாா் (ஆம்பூா்), முருகன் (ஜோலாா்பேட்டை), வரதராஜன் (திருப்பத்தூா்), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)முருகேசன், தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.