சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மளிகைக் கடையில் குட்கா பறிமுதல்

திருப்பத்தூா் அருகே மளிகைக் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

குட்கா பொருள்கள் - பிரதிப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 10:30 pm

திருப்பத்தூா் அருகே மளிகைக் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் அடுத்த குரும்பேரி களா்பதி பகுதியைச் சோ்ந்தவா் தண்டபாணி(52). இவா் அதே பகுதியில் மளிகை வைத்து உள்ளாா்.

மேலும் கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூா் கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் மளிகைக் கடையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது விற்பனைக்காக கோணி பைகளில் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள ஏழரை கிலோ குட்கா பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது.

அதையடுத்து போலீஸாா் தண்டபாணியை கைது செய்து, குட்கா மூட்டைகளையும் பறிமுதல் செய்தனா்.