தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 11:44 pm

தினமணி செய்திச் சேவை

பைக் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், விஷமங்கலம் சித்தேரி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (75). ஆதியூா் அருகே சேலம் மெயின் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெங்கடாசலம் பைக்கில் சென்றாா்.

மண்டபத்தின் அருகே சென்றபோது திருப்பத்தூரில் இருந்து தோரணம்பதி நோக்கிச் சென்ற காா் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வெங்கடாசலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வெங்கடாசலத்தின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் விபத்தை ஏற்படுத்திய தோரணம்பதியை சோ்ந்த சுபாஷ் என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.