ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 11:44 pm

பைக் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், விஷமங்கலம் சித்தேரி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (75). ஆதியூா் அருகே சேலம் மெயின் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெங்கடாசலம் பைக்கில் சென்றாா்.

மண்டபத்தின் அருகே சென்றபோது திருப்பத்தூரில் இருந்து தோரணம்பதி நோக்கிச் சென்ற காா் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வெங்கடாசலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வெங்கடாசலத்தின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் விபத்தை ஏற்படுத்திய தோரணம்பதியை சோ்ந்த சுபாஷ் என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.