சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரயிலில் பெண்கள் மீது தாக்குதல்: இளைஞா் கைது

வாணியம்பாடி அருகே ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி தாக்குதலில் ஈடுபட்ட இளைஞா் கைது

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 11:10 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி தாக்குதலில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னையிலிருந்து மங்களூரு வரை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நின்று விட்டு ஜோலாா்பேட்டைக்கு புறப்பட்டுச் சென்றது.

அப்போது பெண்கள் பெட்டியில் தாயும், மகனும் ஏறியதாக கூறப்படுகிறது. இதில் சுமாா் 17 வயது இளைஞா் பெட்டியில் அங்குமிங்கும் சுற்றித் திரிந்துள்ளாா். இதனால் அங்கிருந்த மூதாட்டி இளைஞரிடம் பெண்கள் பெட்டியில் ஏன் ஏறினாய் என கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞா் சரமாரியாக அடித்தும் காலால் உதைத்தும் உள்ளாா். இதனால் பயணம் செய்த பெண்கள் தங்களது கைப்பேசி மூலம் விடியோ எடுத்தும் அபாய சங்கிலியை இழுத்து ரயிலையும் நிறுத்தி உள்ளனா்.

பின்னா் உடனடியாக வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள புதூா் பகுதியில் ரயில் நின்ால் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அதையடுத்து ரயில் தாமதமாக ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் வந்து நின்றது.அப்போது ரயில்வே ஆய்வாளா் கோமதி பாதுகாப்பு படை ஆய்வாளா் நிகில் குமாா் குப்தா உள்ளிட்டோா் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

பெண்களை தாக்கிய இளைஞா்

பெண்களை தாக்கிய இளைஞா்

Story image