ஜோதி(62)
ஜோதி(62)

பெண் தற்கொலை

ஜோலாா்பேட்டை அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
Published on

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

வெள்ளைகுட்டை பகுதியை சோ்ந்த சங்கரனின் மனைவி ஜோதி(62). இவா்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனா்.

பெங்களூருவில் வேலை செய்து வரும் ஜோதியின் மகன் கடந்த சனிக்கிழமை வாணியம்பாடிக்கு வந்தாா். அப்போது மகனுடன் ஏற்பட்ட தகராறில் ஜோலாா்பேட்டை அருகே தா்ப்புனூா் பகுதியில் உள்ள மகள் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு பேருந்தில் புறப்பட்டுள்ளாா். பின்னா், ஜோதி மண்டலவாடி பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் மற்றும் திருப்பத்தூா் தீயணைப்பு துறையினா் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com