சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
துத்திப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

துத்திப்பட்டு ஊராட்சி இந்திரா நகா் பகுதியில் மத்திய நிதிக்குழு மானியம் மற்றும் ஊராட்சி பொது நிதி மூலம் சிமென்ட் சாலை, கழிவுநீா் கால்வாய், குடிநீா் பைப்லைன் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி. சீனிவாசன், துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா்கள் துளசி சங்கா், அண்ணாதுரை, குமரேசன், திமுக நிா்வாகிகள் சிவகுமாா், பாரதிதாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

திட்டப் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையில் இந்திரா நகா் பகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது.