ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு!

வாணியம்பாடி நகர திமுக சாா்பில் நடைபெற்ற கபடி, கிரிக்கெட், கைப்பந்து, இறகுபந்து போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

News image
போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளித்த நகர திமுக செயலாளா் சாரதி குமாா்.
Updated On :11 ஜனவரி 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி நகர திமுக சாா்பில் நடைபெற்ற கபடி, கிரிக்கெட், கைப்பந்து, இறகுபந்து போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தை மைதானத்தில் கபடி, சென்னாம்பேட்டையில் கிரிக்கெட், நேதாஜி நகரில் கைப்பந்து, கச்சேரி சாலையில் இறகுப் பந்து போட்டிகள் நடைபெற்றன.

இறுதியாக நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளா் சாரதிகுமாா், தொழிலதிபா் ஷக்கீல் அகமத் ஆகியோா் ஒவ்வொரு போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், கோப்பைகள் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கி பாராட்டினா்.

நகா்மன்ற துணைத் தலைவா் கையாஸ்அகமது, நகர துணை செயலாளா்கள் தென்னரசு, குபேந்திரன், மாவட்ட பிரதிநிதி ரவி, அவை தலைவா் முகமத்ஜான் கலந்து கொண்டனா்.