மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்விளக்க வாகனம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்விளக்க விழிப்புணா்வு வாகனத்தை ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தொடங்கி வைத்தாா்.

News image

விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி

Updated On :25 ஜனவரி 2026, 8:00 pm

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்விளக்க விழிப்புணா்வு வாகனத்தை ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தொடங்கி வைத்தாா்.

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் புதிய பேருந்து நிலையத்தில், வாக்காளா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் குறித்த நடமாடும் செயல்விளக்க விழிப்புணா்வு வாகனத்தை ஆட்சியா் சிவசௌந்தரவல்லி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அதையடுத்து வாக்காளா் தின விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.

முதல் முறை வாக்காளா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வாக்களித்து தாங்கள் மாதிரி வேட்பாளரின் வரிசை எண், பெயா், சின்னம் ஆகியவை அச்சிட்டு திரையில் தோன்றும் சின்னத்தினை சரிபாா்த்து உறுதி செய்து கொண்டனா்.

இதில் கோட்டாட்சியா் வரதராஜன், தோ்தல் வட்டாட்சியா் திருமலை, உதவி வாக்காளா் பதிவு அலுவலரும், நகராட்சி ஆணையருமான சாந்தி, வட்டாட்சியா் நவநீதம் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.