வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தூய்மை பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

சிறப்பாக பணிபுரிந்தமைக்கான பாராட்டுச் சான்றிதழ் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டது.

News image

சிறப்பாக பணிபுரிந்தமைக்காக நகராட்சி தூய்மை பணியாளருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன். உடன் நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம்.

Updated On :27 ஜனவரி 2026, 6:34 pm

சிறப்பாக பணிபுரிந்தமைக்கான பாராட்டுச் சான்றிதழ் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டது.

நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினாா். நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், நகராட்சி ஆணையா் ஏ.முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பங்கேற்று, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து சிறப்பாக பணிபுரிந்த நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.

நகராட்சி பொறியாளா் வி. சந்திரன், உதவி பொறியாளா் சண்முகம், துப்புரவு அலுவலா் அருள்செல்வதாஸ், மேலாளா் தாமோதரன், நகராட்சி அலுவலா் மதன், நகா்மன்ற உறுப்பினா்கள் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், என்.எஸ். ரமேஷ், பொதுமக்கள், நகராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.