கோப்புப்படம்.
திருப்பத்தூர்
பலத்த காயமைடந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கல் விழுந்ததில் பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தது.
கல் விழுந்ததில் பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தது.
ஆம்பூா் எம்சி ரோடு ரபீக் நகரைச் சோ்ந்தவா் வாஹித். இவருடைய மனைவி பெளஷியா. தோல் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனா். இவரது பெண் குழந்தை ஹாபியா தஸ்கின் (3) வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்து. அப்போது குழந்தை மீது கல் விழுந்ததில் பலத்த காயமடைந்தது. குழந்தை ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

